By Unknown On செவ்வாய், அக்டோபர் 25, 2016 | Categorized As , | With 1 comments
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதி நகரான குவெட்டா நகருக்கு வெளியே அமைந்திருந்துள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த சுமார் 60 பொலிஸ் படை பயிற்சி பெறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பயிற்சியர் தங்கியிருந்த இந்த பொலிஸ் பயிற்சி நிலையத்தின், விடுதியின் உள்ளே நுழைந்த 5 அல்லது 6 பேர் அடங்கிய தாக்குதல்தாரிகள் அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைத்த அரச பாதுகாப்பு பிரிவினர் மூன்று துப்பாக்கிதாரிகளை சுட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த தாக்குதல்தாரிகள் இயக்கப்பட்டு இருக்கலாம் என்று தான் நம்புவுதாக, ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (ம|ஸ)
By Unknown On செவ்வாய், அக்டோபர் 25, 2016 | Categorized As , | With 0 comments
நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடகர் ”சில்லி” (திலங்க விதூஷ), இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தை – விஜிதபுர பகுதியில் வைத்து ஒருவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 11ம் திகதி தலங்கம பொலிஸாரால் சில்லி கைதுசெய்யப்பட்து பின்னர் கடுவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

10,000 ரூபாவான ரொக்கப்பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் அவரை விடுதலை செய்ததுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்ட கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார்.(ச)